குழந்தைகளாக இருக்கையில் நம்மில் பலர் பாடியிருக்கும் பாடல் இது. இதைப் போலத்தான் இன்று ராசாவின் வேஷம் கலைந்தது. இன்று அதிகாலை பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்தியா முழுவதும் சோதனையை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஆ.ராசாவின் டெல்லி வீட்டையும் சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை அள்ளிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதம் முன்பாக ஆ.ராசா என்ன பேசினார் என்பதை நினைவுப் படுத்திப் பாருங்கள். There is no question of resigning. No irregularity in spectrum allocation. Everything was done with Prime Minister’s knowledge. என்னவெல்லாம் பேசினார். இன்று பேச்சு மூச்சில்லாமல், திமுகவில் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற வருத்தத்திலும், குழப்பத்திலும் இருக்கிறார்.
இன்று சிபிஐ வளையத்தில் ராசாவைத் தவிர, ராசாவின் செயலாளராக இருந்த ஆர்.சே.சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறை செயலாளர் கே.ஸ்ரீதர், தொலைதொடர்புத் துறை அதிகாரி ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். மொத்தம் 14 இடங்களில் தொடங்கிய சோதனை இன்று மாலை வரை தொடர்ந்தது.
சென்னையில் ராசாவின் பினாமியாக கருதப் படும் க்ரீன் ஹவுஸ் ப்ரோமோட்டர்சின் மேலாண் இயக்குநர் சாதிக் பாட்சா என்பவர் வீட்டிலும் நடந்தது.
No comments:
Post a Comment